search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவையற்ற மண்"

    மணிப்பூர் மாநிலத்தில் தண்டவாள கட்டுமானப்பணியின் போது கிடைக்கும் தேவையற்ற மண்ணை செங்கலாக மாற்றும் திட்டத்தை ரெயில்வே தொடங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபாம்-இம்பால் இடையே புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது மிகப்பெரிய திட்டமாகும். பொதுவாக மலைப்பாதையில் ரெயில்வே பாதை அமைக்கப்படும் போது ஏராளமான மண் வீணாக்கப்படுகிறது.

    இந்த மண்ணானது தாழ்வான பகுதிகள் அல்லது நீர் ஆதாரங்களினுள் நிரப்படுகின்றன. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மாசுபாட்டை குறைக்கும் வகையில் வடகிழக்கு எல்லைப்புற ரெயில்வேயானது. சில்சார் என்.ஐ.டி.யுடன் இணைந்து புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.



     இதன் மூலம், வீணாகும் மண்ணுடன், சிறிதளவு சிமெண்ட் சேர்க்கப்பட்டு செங்கல் தயாரிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 செங்கல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை மிகவும் உறுதியாகவும், விலை குறைவாகவும் உள்ளதால் பொதுமக்கள் பெரியளவில் பயனடைந்துள்ளனர்.
    ×